search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக சட்டசபை ( கோப்பு படம்)
    X
    தமிழக சட்டசபை ( கோப்பு படம்)

    தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை ஒத்தி வைப்பு- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

    மொத்தம் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி முதல் 22 நாட்கள் நடைபெற்றது.  நாள்தோறும் பல்வேறு அரசுதுறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. 

    இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். மேலும், பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர். 

    110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதா உட்பட 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    பல்வேறு முக்கிய சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    சட்டசபையின் நிறைவு நாளான இன்று வரை 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில், தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார். 
    Next Story
    ×