என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்9 Nov 2021 1:54 AM GMT (Updated: 9 Nov 2021 1:54 AM GMT)
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அவரது மனைவி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை :
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி (வயது 88), கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து வெளியூர் பயணங்களை தவிர்த்து வந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காரில் சென்று வந்தார்.
கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ரெயில் மூலம் கோவை சென்றார். பின்னர், குன்னூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்பின்பு, ரெயில் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார்.
இந்தநிலையில் அவருக்கும், அவரது மனைவி மோகனாவுக்கும் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இருவரும் சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி (வயது 88), கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து வெளியூர் பயணங்களை தவிர்த்து வந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காரில் சென்று வந்தார்.
கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ரெயில் மூலம் கோவை சென்றார். பின்னர், குன்னூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்பின்பு, ரெயில் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார்.
இந்தநிலையில் அவருக்கும், அவரது மனைவி மோகனாவுக்கும் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இருவரும் சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X