என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை - கீரனூர் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்27 Oct 2021 8:21 AM GMT (Updated: 27 Oct 2021 8:21 AM GMT)
பணி புரியும் இடத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் வீரகாந்தி (வயது55). இவர் கடந்த மாதம் பணியில் இருந்தபோது அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் போலீசுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோரிடம் நேரடியாக புகார் அளித்தார். இதனை யடுத்து இன்ஸ்பெக்டர் வீரகாந்தியை திண்டுக்கல் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பழனி அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. சீனிவாசன் உத்தரவிட் டிருந்தார். விசாரணையில் வீரகாந்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X