search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் உற்சாக குளியல்
    X
    புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் உற்சாக குளியல்

    புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் உற்சாக குளியல்

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி நீச்சல் குளத்தில் இறங்கி தண்ணீரில் படுத்து குளித்து மகிழ்ந்தன.
    திருச்சி :

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள், லட்சுமி ஆகிய 2 யானைகள் உள்ளன.

    இந்த யானைகள் குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோவிலுக்கு சொந்தமான உடையவர் தோப்பில் 56 அடிநீளம், 56 அடி அகலம் மற்றும் 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீச்சல் குளம் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.

    நேற்று இந்த நீச்சல் குளத்தில் கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகியவற்றை இறக்கி குளிக்க வைத்து பார்க்கப்பட்டது.

    அப்போது 2 யானைகளும் உற்சாகமாக நீச்சல் குளத்தில் இறங்கி தண்ணீரில் படுத்து குளித்து மகிழ்ந்தன.
    Next Story
    ×