என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்- அய்யாக்கண்ணு பேட்டி
Byமாலை மலர்11 Oct 2021 4:11 AM GMT (Updated: 11 Oct 2021 4:11 AM GMT)
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
ஒரத்தநாடு:
பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் விற்பனைக்காக சாலை நெடுகில் பெருமளவில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல்களை விரைவாக கொள்முதல் செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் 17 சதவீதத்திற்கும் கூடுதலான ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.20-யை கூலியாக அரசு வழங்க வேண்டும்.
விவசாயிகள் விளைவிக்கும் நெல், கரும்பு உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கான விலையை உயர்த்தி லாபகரமான விலையை வழங்கிட வேண்டும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி விரைவில் திருச்சியில் 45 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சங்க மாநில செயலாளர் கக்கரை மனோகரன் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X