என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் எதிர்க்கட்சிகள் மறியல் போராட்டம்- விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட 400 பேர் கைது
Byமாலை மலர்27 Sep 2021 6:38 AM GMT (Updated: 27 Sep 2021 6:38 AM GMT)
நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் இணைந்துள்ளன.
நாகர்கோவில்:
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் இணைந்துள்ளன.
அவ்வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக, காங்கிரஸ், மதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அந்தோணி, மோகன், இளங்கோ உட்பட 400க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X