என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முல்லைப்பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்
கூடலூர்:
தமிழக - கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர். அணையின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின்படி மூவர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்து அதன் அறிக்கையை மூவர் குழுவிடம் அளித்தனர். அணையின் நீர் மட்டம் உயரும் போதும், பருவமழை காலங்களிலும் ஐவர் குழு மற்றும் மூவர் குழு பெரியாறு அணையை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே அணையை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக திருவனந்தபுரம் போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு செல்போன் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அழைப்பு திருச்சூரில் இருந்து வந்தது எனவும், அது புரளி என்றும் தெரியவந்தது. மேலும் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.
இதனிடையே பெரியாறு அணை பகுதியில் டி.எஸ்.பி. நந்தன்பிள்ளை தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்