search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முல்லை பெரியாறு அணை"

    • பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    கூடலூர்:

    தமிழகத்தில் மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.

    தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2ம் போக நெல் சாகுபடி முடிந்ததால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு 711 கன அடியில் இருந்து இன்று 105 கன அடியாக குறைக்கப்பட்டது.


    பாசனத்துக்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அணைக்கு 83 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 118.35 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 64.50 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 417 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 1202 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 110.83 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன்பின்னர் நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 18 நாட்களாக அணையின் நீர் மட்டம் 71 அடியில் நீடித்தது. இந்தநிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் சற்று சரிந்து 70.85 அடியாக உள்ளது. அணைக்கு 916 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1169 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. அணைக்கு 282 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 59 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேலும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர், அரசரடி உள்ளிட்ட கிராமங்களில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 3-வது முறையாக அணையின்நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர்முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நேற்று பகல்பொழுதில் திடீரென கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து 5224 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவில் நீடிப்பதால் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 5-வது நாளாக 71 அடியில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே நீர்வரத்து மற்றும் இருப்பு அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. அணைக்கு 1702 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து நீர்திறப்பு இன்று காலை நிறுத்தப்பட்டது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.50 அடியாக உள்ளது. அணைக்கு 281 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 382.31 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • 141 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை.
    • 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 7 மணி நிலவரப்படி 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியது.

    இதனால், கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது.
    • தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 10-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுரை, சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

    இருந்தபோதும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட 2-ம் பூர்வீக பாசனத்துக்காக இன்று காலை முதல் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 7 சிறிய மதகுகள் மூலம் 5 நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தின் 10531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. வினாடிக்கு 1492 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது. வரத்து 1016 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6128 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடி. வரத்து மற்றும் திறப்பு 154 கன அடி.

    தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கனமழை நின்ற பிறகும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் அங்கு குளிக்க இன்று 29-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அணையின் நீர்மட்டத்தை பொறுத்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மதுரை குடிநீர் திட்டத்துக்காக லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் பம்பிங் செய்வதில் பிரச்சனை ஏறுபட்டது. கூடலூர், உத்தமபாளையம், கம்பம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை, பண்ணைபுரம், தேவாரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு முல்லைப்பெரியாறு அணை மூலமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 119.40 அடி நீர்மட்டம் உள்ளது. 526 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 400 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 500 கன அடியாக உயர்த்தப்பட்டது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.18 அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர்திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.01 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, தேக்கடி 0.6, உத்தமபாளையம் 1, சண்முகாநதி அணை 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது.
    • வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. கேரள மாநிலத்தில் கனமழை பெய்தபோதும் முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் ஜூலை மாதத்தில் பருவமழை தீவிரமடைந்து அணைப்பகுதியில் மழை பெய்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து 120 அடியை எட்டியது. இந்த நிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 119.90 அடியாக உள்ளது. 301 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது. வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாததால் மூலவைகையாற்றில் நீர்வரத்து குறைந்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றுவிட்டது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 29.04அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.
    • தற்போது பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கனிசமாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. தற்போது பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 117.30 அடியாக உள்ளது. அணைக்கு 204 கனஅடி நீர் வருகிறது.

    தமிழக பகுதிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.46 அடியாக உள்ளது. 113 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக அணையில் இருந்து 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.70 அடியாக உள்ளது. 30 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.74 அடியாக உள்ளது. 10 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 2, தேக்கடி 0.4, போடி 0.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறு த்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
    • குழுவினர் முல்லை பெரியாறு அணை, பேபி அணை, கேலரி, நீர்கசிவின் அளவு, 13 மதகு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    கூடலூர்:

    கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணைமூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மதுரை, தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    அணையில் பராமரிப்பு பொறுப்பை தமிழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அணையின் உறுதித்தன்மை, பாதுகாப்பு குறித்து கேரளா அரசு தொடர்ந்து சந்தேகத்தை கிளப்பி வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறு த்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.

    பருவமழை மாற்றங்களின்போதும், அணையின் நீர்மட்டம் உயரும்போதும், குறையும் போதும் ஆய்வு செய்ய மத்திய தலைமை கண்காணிப்புக்குழுவை அமைத்தது. மேலும் அவர்களுக்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. கடந்த மே மாதம் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் 10 மாதங்களுக்கு பிறகு இன்று ஆய்வு மேற்கொண்டனர். மத்திய கண்காணிப்புக்குழு தலைவர் விஜய்சரண் தலைமையில் தமிழக தரப்பில் நீர்வள ஆதார த்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்ஷேனா, காவிரி தொழிற்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரளா அரசு தரப்பில் நீர்வளத்தறை கூடுதல் செயலாளர் வேணு, நீர்பாசன முதன்மை பொறியாளர் அலெக்ஸ்வர்க்கீஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த குழுவில் தலைவர் மற்றும் தமிழக, கேரளா அரசு சார்பில் தலைமை பொறியாளர்கள் என 3 பேர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தலைமை கண்காணிப்பு குழுவை 5 பேர் கொண்ட குழுவாக உயர்த்தியுள்ளது. அதன் பிறகு நடக்கும் முதல் ஆய்வு ஆகும். வழக்கமாக அணை ப்பகுதிக்கு கண்காணிப்புக் குழுவினர்படகு மூலம் சென்று வருவார்கள். ஆனால் முதன் முறையாக இன்று கார் மூலம் வல்லக்கடவு வழியாக சென்றனர். தளவாட பொருட்கள் கொண்டு செல்வது குறித்து பார்வையிட்டனர். மேலும் இந்த முறை தமிழக, கேரள பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குழுவினர் முல்லை பெரியாறு அணை, பேபி அணை, கேலரி, நீர்கசிவின் அளவு, 13 மதகு பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் மாலையில் குமுளியில் ஆலோசனை க்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அணைக்கு தளவாட பொருட்கள் கொண்டு செல்வது குறித்து தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைக்க உள்ளனர். அதன் பின்னர் வனத்துறை இடையூறு இல்லாமல் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.75 அடியாக உள்ளது. 153 கனஅடி நீர் வருகிறது. 258 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக உள்ளது. 164 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 46.57 அடியாக உள்ளது. 13 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடி 2.4, போடி 1.6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. 

    • முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.
    • பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கேரள அரசு மீண்டும் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் நீர் ஆதரமாக திகழ்வது முல்லை பெரியாறு அணை.

    இந்த அணையில் 154 அடி வரை தண்ணீரை தேக்கலாம். இதற்கு கேரள அரசு ஒப்புக்கொள்வதில்லை. இதனால் முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தது.

    இதில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் கேரள அரசும் மனு செய்துள்ளது. அந்த மனுவில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளது. மேலும் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை முல்லை பெரியாறு அணை பகுதியில் 138 சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறியுள்ளது.

    எனவே நீரியல், கட்டுமானம், புவியியல் நில நடுக்கம் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கேரள அரசு மீண்டும் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.85 அடியாக உள்ளது. 8 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. 152 அடி உயரம் கொண்ட அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கேரள அரசு பல்வேறு முட்டுக்கட்டை போட்டுவந்தபோதும் பருவமழை காலங்களின் போது 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் பலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு 89 கனஅடிநீர் மட்டுமே வருகிறது. ஆனால் தமிழக பகுதிக்கு 1867 கனஅடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நீர்மட்டம் 139.40 அடியாக சரிந்துள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் 69 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்பட்ட நிலையில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை நின்றபோதும் தண்ணீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால் தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து 52.56 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 667 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2669 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.85 அடியாக உள்ளது. 8 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • ஆண்டிப்பட்டி மற்றும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் 541 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1166 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 9-ந்தேதி 136 அடியை எட்டியவுடன் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறையினரால் விடப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை கடந்து விட்டதால் இன்னும் ஓரிரு நாளில் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 141.40 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2106 கனஅடி நீர் வருகிறது.

    நேற்று வரை 511 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 1100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ரூல்கர்வ் விதிமுறைப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் இடுக்கி மாவட்டத்திற்கும், லோயர்கேம்ப் வழியாக தமிழக பகுதிக்கும் திறக்கப்படும். இதனை தவிர்க்கும் வகையில் இன்று காலை முதல் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நீர் இருப்பு 7504 மி.கனஅடியாக உள்ளது. பெரியாறு அணை நீர்மட்டத்தை மே 31-ந்தேதி வரை 142 அடிவரை தேக்கி வைத்து கொள்ளலாம் என்பதால் கூடுதல் தண்ணீரை வெளியேற்றி வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66.27 அடியாக உள்ளது. நீர்வரத்து 2900 கனஅடி. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் 69 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 4916 மி.கனஅடியாக உள்ளது. கனமழை நீடிக்கும் பட்சத்தில் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 54.90 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 7.8, தேக்கடி 23.6, கூடலூர் 6.8, சண்முகாநதி அணை 5.6, உத்தமபாளையம் 3.6, வைகை அணை 2.2, சோத்துப்பாறை 10, வீரபாண்டி 5, அரண்மனைப்புதூர் 2.2, ஆண்டிபட்டி 2.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    ×