search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    3 மாணவர்களுக்கு கொரோனா- தோட்டக்கலை கல்லூரிக்கு 1 வாரம் விடுமுறை

    திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார்சத்திரம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படவே ஒரு வாரம் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 135 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின.

    இந்நிலையில் விடுதியில் தங்கி பயின்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.

    முன்னதாக மற்ற மாணவர்கள் மற்றும் அலுவலர்களிடமும் கொரோனா பரிசோதனைக்கு மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் கே.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் கொத்தப்புள்ளி ஊராட்சி நிர்வாகம் சார்பில் கல்லூரி வளாகம் மற்றும் மாணவர் விடுதியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

    இது குறித்து கல்லூரி அதிகாரி தெரிவிக்கையில், தொற்று கண்டறியப்பட்ட 3 மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள், அலுவலர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வந்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உயரதிகாரிகள் ஆலோசனையின்படி மீண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட உள்ளது என்றார்.
    Next Story
    ×