என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டையில் அரசு பள்ளி ஆசிரியர்கள்- 4 மாணவிகளுக்கு கொரோனா
Byமாலை மலர்20 Sep 2021 9:00 AM GMT (Updated: 20 Sep 2021 9:00 AM GMT)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
உளுந்தூர்பேட்டை:
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அளித்து அரசு உத்தவிட்டது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. பள்ளி வகுப்பறைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது.
இருப்பினும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அந்த பள்ளியில் படித்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரது பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பள்ளி மாணவிகள் 4 பேருக்கும், ஆசிரியர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகளை அளித்து அரசு உத்தவிட்டது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. பள்ளி வகுப்பறைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது.
இருப்பினும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அந்த பள்ளியில் படித்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவரது பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பள்ளி மாணவிகள் 4 பேருக்கும், ஆசிரியர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X