என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடை பணிகளில் திடீர் மாற்றம்- தமிழக அரசு உத்தரவு
Byமாலை மலர்8 Jun 2021 2:01 AM GMT (Updated: 8 Jun 2021 2:24 AM GMT)
11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை முற்பகல் நேரத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழக்கம்போல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். இந்த சூழலில் ரேஷன் கடைகளின் பணி நேரம் குறித்து உத்தரவுகள் வழங்கப்படுகின்றன. 7-ந் தேதி முதல் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும்; பிற்பகல் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும். மறு உத்தரவு வரும் வரை இந்த வேலை நேரம் நடைமுறையில் இருக்கும்.
கொரோனா நிவாரணத்திற்கான 2-ம் தவணைத்தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பு 15-ந் தேதி முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுச் செல்ல ஏதுவாக டோக்கன் வினியோகத்தை 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கடைப் பணியாளர்கள் பிற்பகல் நேரத்தில் அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும். 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை முற்பகல் நேரத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வழக்கம்போல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X