என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் கொரோனா உச்சம்- ஒரே நாளில் 1538 பேருக்கு நோய் தொற்று
Byமாலை மலர்27 May 2021 8:47 AM GMT (Updated: 27 May 2021 8:47 AM GMT)
மதுரையில் கொரோனா பராமரிப்பு முகாம்களில் லேசான பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளோருக்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து விட்டது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக மதுரை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 ஆயிரத்து 36 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1538 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவே உச்சபட்ச பாதிப்பு ஆகும். அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை 463 ஆக குறைந்து உள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த போதிலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் அது நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் 20 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது.
மதுரையில் கொரோனா பராமரிப்பு முகாம்களில் லேசான பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளோருக்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து விட்டது. எனவே அவர்கள் கொரோனா ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே நோயாளிகளின் நேற்றைய டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக மதுரை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 ஆயிரத்து 36 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1538 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவே உச்சபட்ச பாதிப்பு ஆகும். அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை 463 ஆக குறைந்து உள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த போதிலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் அது நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் 20 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து விட்டது.
மதுரையில் கொரோனா பராமரிப்பு முகாம்களில் லேசான பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளோருக்கு பாதிப்பு படிப்படியாக அதிகரித்து விட்டது. எனவே அவர்கள் கொரோனா ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாகவே நோயாளிகளின் நேற்றைய டிஸ்சார்ஜ் எண்ணிக்கை குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X