என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரியில் கொட்டிய மழையால் 1500 பாசன குளங்கள் நிரம்பியது
Byமாலை மலர்21 May 2021 8:03 AM GMT (Updated: 21 May 2021 8:03 AM GMT)
சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 12.82 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 16.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 36.91 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர் மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலை 43.08 அடியாக இருந்தது. அணைக்கு 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 433 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 64.10 அடியாக உள்ளது. அணைக்கு 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு1 அணையின் நீர் மட் டம் 12.77 அடியாக உள்ளது. அணைக்கு 28 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 12.82 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 16.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 36.91 அடியாகவும் உள்ளது.
திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
குமரியில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது. மாவட்டத்தில் உள்ள 2040 குளங்களில் 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்களில் 50 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது.
அணைகளும், பாசன குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
சுசீந்திரம், பூதப்பாண்டி, அருமநல்லுர், தக்கலை, தேரூர், பொற்றையடி உள்ளிட்ட பகுதிகளில் வயல் உழவு பணி நடந்து வருகிறது. ஒருசில விவசாயிகள் நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்கள் தங்குதடையின்றி வழங்குதற்கு வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
வழக்கமாக கன்னிபூ சாகுபடிக்கு ஜூன் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை அணை திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் அணையை பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர் மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலை 43.08 அடியாக இருந்தது. அணைக்கு 436 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 433 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 64.10 அடியாக உள்ளது. அணைக்கு 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு1 அணையின் நீர் மட் டம் 12.77 அடியாக உள்ளது. அணைக்கு 28 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு2 அணையின் நீர் மட்டம் 12.82 அடியாகவும், பொய்கை அணையின் நீர் மட்டம் 16.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 36.91 அடியாகவும் உள்ளது.
திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
குமரியில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது. மாவட்டத்தில் உள்ள 2040 குளங்களில் 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்களில் 50 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது.
அணைகளும், பாசன குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மாவட்டம் முழுவதும் கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
சுசீந்திரம், பூதப்பாண்டி, அருமநல்லுர், தக்கலை, தேரூர், பொற்றையடி உள்ளிட்ட பகுதிகளில் வயல் உழவு பணி நடந்து வருகிறது. ஒருசில விவசாயிகள் நாற்று பாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்கள் தங்குதடையின்றி வழங்குதற்கு வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
வழக்கமாக கன்னிபூ சாகுபடிக்கு ஜூன் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை அணை திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் அணையை பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறந்து விடுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X