search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை கோர்ட்டில் பணிபுரிந்த நீதிபதி கொரோனாவுக்கு பலி

    நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே நீதிபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நீஷ் (வயது47). நீதிபதியான இவர் மதுரை ஐகோர்ட்டில் பணிபுரிந்து பின்னர் வள்ளியூர் கோர்ட்டில் வேலை பார்த்தார்.

    கடந்த மாதம் 5-ந்தேதி நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நீஷ் பணி அமர்த்தப்பட்டார்.

    இந்நிலையில் பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

    அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து வென்டிலேட்டர் வசதிக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் இறந்தார்.

    Next Story
    ×