என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பேராசிரியர்கள் கல்லூரிக்கு வரவேண்டாம்: வீடுகளில் இருந்து ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதி - உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்
சென்னை:
கொரோனா தொற்று பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் படிப்படியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வருகிறார்கள். ஆனாலும், உதவி பேராசிரியர்கள், பேராசிரியர்கள் கல்லூரிக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை என்றாலும், பேராசிரியர்கள் வருவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் வீடுகளில் இருந்து கல்லூரி ஆசிரியர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இணை இயக்குனர் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கல்லூரி ஆசிரியர்கள் கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக் கூடாது. ஆன்லைன் வகுப்புகளை வீட்டில் இருந்து நடத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்