என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இரவு நேர பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள்
Byமாலை மலர்21 April 2021 4:50 AM GMT (Updated: 21 April 2021 4:50 AM GMT)
இரவு நேர ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர்.
திண்டுக்கல்:
இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து எத்தனை மணிவரை மற்ற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினமே அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டது.
இருந்தபோதும் ரெயில் பயணங்களில் வந்தவர்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு வந்து மற்ற கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 8 மணிக்கு மேல் மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. நேரம் செல்ல செல்ல பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
இதனால் பலர் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பயணம் மேற்கொண்டனர். மேலும் சிலர் பஸ் நிலையத்திலேயே நீண்டநேரம் காத்திருந்து பின்னர் நடந்தே தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல முயன்றனர். பஸ் நிலையம் உள்பட எந்த பகுதியிலும் டீக்கடை, ஓட்டல்கள் இல்லாததால் உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதேபோல ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பல்வேறு பஸ் நிலையங்களிலும் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் காத்திருந்தனர்.
இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து எத்தனை மணிவரை மற்ற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினமே அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டது.
இருந்தபோதும் ரெயில் பயணங்களில் வந்தவர்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு வந்து மற்ற கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 8 மணிக்கு மேல் மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. நேரம் செல்ல செல்ல பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.
இதனால் பலர் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பயணம் மேற்கொண்டனர். மேலும் சிலர் பஸ் நிலையத்திலேயே நீண்டநேரம் காத்திருந்து பின்னர் நடந்தே தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல முயன்றனர். பஸ் நிலையம் உள்பட எந்த பகுதியிலும் டீக்கடை, ஓட்டல்கள் இல்லாததால் உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இதேபோல ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பல்வேறு பஸ் நிலையங்களிலும் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் காத்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X