search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பஸ் இல்லாததால் காத்திருந்த பயணிகள்.
    X
    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பஸ் இல்லாததால் காத்திருந்த பயணிகள்.

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இரவு நேர பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள்

    இரவு நேர ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர்.
    திண்டுக்கல்:

    இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து எத்தனை மணிவரை மற்ற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு நேற்று முன்தினமே அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டது.

    இருந்தபோதும் ரெயில் பயணங்களில் வந்தவர்கள் திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு வந்து மற்ற கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 8 மணிக்கு மேல் மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. நேரம் செல்ல செல்ல பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

    இதனால் பலர் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பயணம் மேற்கொண்டனர். மேலும் சிலர் பஸ் நிலையத்திலேயே நீண்டநேரம் காத்திருந்து பின்னர் நடந்தே தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல முயன்றனர். பஸ் நிலையம் உள்பட எந்த பகுதியிலும் டீக்கடை, ஓட்டல்கள் இல்லாததால் உணவு கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதேபோல ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பல்வேறு பஸ் நிலையங்களிலும் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் காத்திருந்தனர்.



    Next Story
    ×