என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்- மாவட்ட கலெக்டர் உத்தரவு
Byமாலை மலர்21 April 2021 3:21 AM GMT
மகாவீர் ஜெயந்தி, மே தினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வரும் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தியும், உழைப்பாளர்கள் தினமாக மே 1-ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அந்த இரு தினங்களும் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சார்ந்த பார்கள் என அனைத்து வகையான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.
எனவே மேற்கண்ட இரு தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இதை மீறினால் மதுபான சட்ட விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X