என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் பெண் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை
பீளமேடு:
கோவை பீளமேடு ஜி.ஆர்.ஜி. நகரை சேர்ந்தவர் கோகிலா (வயது 45). என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கு பள்ளி செல்லும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் கோகிலா வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடந்த 22-ந்தேதி ஊட்டிக்கு சென்றார். இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து கோகிலா அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். மேலும் பணம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என்றும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
பெண் தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்