என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே தனக்குத்தானே கத்தியால் குத்தி கட்டிட தொழிலாளி தற்கொலை
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக்பாண்டி (வயது 27). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் கோபிநாத் என்ற மகன் உள்ளான்.
விவேக்பாண்டி கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை பார்த்த அவரது அம்மாவும், அக்காவும் அவரை கண்டித்தனர்.
மன வேதனை அடைந்த விவேக்பாண்டி சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த வெங்காயம் வெட்டும் கத்தியை எடுத்து தனக்குத்தானே வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்தம் வெளியேறிய அவர் படுகாயத்துடன் கீழே சரிந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்