search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    துரைப்பாக்கத்தில் ஓசி சிகரெட் கேட்டு மளிகை கடையில் ரவுடி ரகளை

    சென்னை துரைப்பாக்கத்தில் மளிகை கடையில் ஓசி சிகரெட் கேட்டு ரகளை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை துரைப்பாக்கம் கல்லுகுட்டை அறிஞர் அண்ணா தெருவில் வசித்து வருபவர் சரண்குமார். இவர் துரைப்பாக்கம் செம்பொன்நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு வந்த 2 பேர் காசு கொடுக்காமல் ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர். இதற்கு சரண்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கடையில் இருந்த தின்பண்ட பாட்டில்களை தூக்கி போட்டு உடைத்தனர். சரண்குமாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுபற்றி சரண்குமார் துரைப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடையில் ஓசி சிகரெட் கேட்டு ரகளை செய்தது ரவுடி மணிகண்டன் என்பது தெரியவந்தது.

    கல்லுகுட்டை செம்பொன் நகரில் வசித்து வரும் இவன் தனது கூட்டாளியான சுந்தருடன் சேர்ந்து கடையில் தகராறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×