search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதனப்பள்ளியில் சூதாடிய 11 பேர் கைது

    மதனப்பள்ளியில் சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி:

    மதனப்பள்ளி அரசு பஸ் நிலையம் அருகில் ஒரு தங்கும் விடுதியில் நேற்று ஒரு கும்பல் சூதாடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நரசிம்மலு, சப்-இன்ஸ்பெக்டர் வம்ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

    அங்கு, சூதாடிய 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 630 பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×