என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்தில் உயிரிழந்த கொத்தனார் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் இழப்பீடு- நீதிபதி உத்தரவு
Byமாலை மலர்4 Dec 2020 1:45 AM GMT
விபத்தில் உயிரிழந்த கொத்தனார் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா இலுப்பக்கோரை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. கொத்தனார். கடந்த 2018-ம் ஆண்டு இவர், சென்னை வேளச்சேரி-சேலையூர் கேம்ப் ரோடு சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் தங்கராசு இறந்து போனார். இதைத்தொடர்ந்து அவரது மனைவி ராஜேஸ்வரி ரூ.38 ½லட்சம் இழப்பீடு கோரி சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, மனுதாரருக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.15 லட்சத்து 72 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த தொகையை வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து ஆண்டுக்கு 7½ சதவீத வட்டி அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X