search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெருமாநல்லூர் அருகே புகையிலை பொருள் விற்ற 2 பேர் கைது

    பெருமாநல்லூர் அருகே புகையிலை பொருள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருமாநல்லூர்:

    பெருமாநல்லூர் சுற்று வட்டார பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    இதனையடுத்து, பெருமாநல்லூர் போலீசார் நடத்திய சோதனையில், முட்டியங்கிணறு பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 25), ஈட்டிவீரம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் (45) ஆகியோர் தங்கள் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×