என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரிப்பு
Byமாலை மலர்13 Nov 2020 4:42 AM GMT (Updated: 13 Nov 2020 4:42 AM GMT)
தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரித்து உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் ஆண்டாள் கோவில் எவ்வளவு சிறப்பானதே, அதேபோல இங்குள்ள பால்கோவாவும் சிறப்பு பெற்றது. இந்த பால்கோவை விரும்பாதவர்கள் இல்லை எனலாம். இந்த பால்கோவா தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானது.
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரித்து உள்ளது. அதேபோல பால் ஸ்வீட்டுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா மற்றும் ஸ்வீட் தயாரித்து விற்பனை செய்து வரும் பாம்பே ரவி கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வருடத்திற்கு 3 முறை பால்கோவா மற்றும் மில்க் ஸ்வீட்டுகள் விற்பனை அதிகரிக்கும். அதாவது அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் போதும், ஆண்டாள் கோவில் தேரோட்டத்தின் போதும், தீபாவளியின் போதும் என ஆண்டிற்கு 3 முறை விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) தீபாவளி கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் பால்கோவா மற்றும் பால் ஸ்வீட் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த பால்கோவாவை ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பேர் வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் ஆண்டாள் கோவில் எவ்வளவு சிறப்பானதே, அதேபோல இங்குள்ள பால்கோவாவும் சிறப்பு பெற்றது. இந்த பால்கோவை விரும்பாதவர்கள் இல்லை எனலாம். இந்த பால்கோவா தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானது.
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரித்து உள்ளது. அதேபோல பால் ஸ்வீட்டுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா மற்றும் ஸ்வீட் தயாரித்து விற்பனை செய்து வரும் பாம்பே ரவி கூறியதாவது:-
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் வருடத்திற்கு 3 முறை பால்கோவா மற்றும் மில்க் ஸ்வீட்டுகள் விற்பனை அதிகரிக்கும். அதாவது அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் போதும், ஆண்டாள் கோவில் தேரோட்டத்தின் போதும், தீபாவளியின் போதும் என ஆண்டிற்கு 3 முறை விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) தீபாவளி கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் பால்கோவா மற்றும் பால் ஸ்வீட் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த பால்கோவாவை ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பேர் வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X