search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனை அதிகரிப்பு"

    • நகைக்கடைகள் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
    • தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திரிதியை வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6.33 மணிக்கு தொடங்கி மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது.

    இதையடுத்து அட்சய திருதியை அன்று நகை வாங்கும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, நகைக்கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.

    இதன்படி, சில கடைகள் தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளன. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.

    தங்க நாணயங்களுக்கு சேதாரம் இல்லை. பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக் கொள்ளலாம்.

    முன்பதிவு செய்பவர்கள் அட்சயதிரிதியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் குறைந்த விலையிலும் அதிகமாக இருந்தால் ஏற்கெனவே முன்பதிவு செய்த விலையிலும் நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

    மேலும் அட்சய திரிதியைக்காக 1000-க்கும் மேற்பட்ட மாடல்களில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அட்சய திரிதியை அன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இரவில் வாடிக்கையாளர்களின் வருகையை பொருத்து கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் அட்சய திரிதியை அன்று நல்ல நேரத்தில் தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் தற்போதே கடைகளுக்கு சென்று முன்பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்த நகைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

     இதுகுறித்து, சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு அட்சய திரிதியை பண்டிகையை முன்னிட்டு, நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்கள் தற்போது கடைகளுக்கு வந்து தங்களுக்கு

    பிடித்த நகைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.55 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால், வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. தமிழகம் முழுவதும் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகைகள் விற்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகை விற்பனை 25 சதவீதம் வரை அதிகரிக்க கூடும்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேஷம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக வெள்ளி நகை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

    சேலம்:

    சேலம் வெள்ளி கொலுசு கலைநயங்களுடன் தயாரிக்கப்ப டுவதால் அதற்கென தனி மவுசு உண்டு.இதனால் சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேஷம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக வெள்ளி நகை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனால் வெள்ளி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டறைகளும், அதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிக மான தொழிலாளர்களும் உள்ளனர். குறிப்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, நங்க வள்ளி, ஜலகண்டாபுரம் உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் கொலுசு பட்டறைகள் உள்ளது. இதன் மூலம் அதிக அளவில் சேலத்தில் கொலுசு, தண்டை, அரைஞான் கொடி உள்பட வெள்ளி நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதனால் தற்போதே வெள்ளி கொலுசு உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே கடந்த வாரம் 74 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி தற்போது 69 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் ஒரே வாரத்தில் கிலோவுக்கு 5 ஆயிரம் சரிந்துள்ளதால் வெள்ளி கொலுசு உட்பட நகைகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தற்போது வெள்ளி நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    மேலும் வட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வெள்ளி கொலுசுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் வெள்ளி தொழில் சுறு சுறுப்பு அடைந்துள்ளது. இனி வரும் நாட்கள் பண்டிகை காலம் என்ப தால் வெள்ளி கொலுசு உட்பட வெள்ளி நகைகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பதால் வெள்ளி பட்டறையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கழுதைப் பால் கொடுப்பது நல்லது என தகவல் பரவி வருகிறது.
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தோம். தற்போது கழுதைப் பால் விற்பனை அதிகரித்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சளித் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் பலரும் மருந்து உட்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கழுதைப் பால் கொடுப்பது நல்லது என தகவல் பரவி வருகிறது.

    இதன் காரணமாக மாவட்டத்தில் கழுதைப் பாலுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் கிராமங்களை சேர்ந்த சிலர் ஊர் ஊராகச் சென்று கழுதைப் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம், எட்டாமடை பகுதிகளில் அவர்கள் வீதி வீதியாக கழுதைகளை அழைத்துச் சென்று பால் விற்று வருகின்றனர். ஒரு சங்கு பால் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தோம். தற்போது கழுதைப் பால் விற்பனை அதிகரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப எங்களால் கொடுக்க முடியவில்லை என்றனர்.

    • சேலம் மார்க்கெட்டுக்கு தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
    • இங்கிருந்து குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தேங்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, கோவை, பெருந்துறை, ஈரோடு, காங்கேயம், தாராபுரம், அவல் பூந்துறை, அரச்சலூர், உடுமலைப்பேட்டை, திருப்பூர், பர்கூர், காவேரிப்பட்டணம், சூளகிரி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கர்நாடகா மாநிலம் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், ஆனூர், ஏலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கிருந்து குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தேங்காய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் நெய் தேங்காய், சிதறு தேங்காய் அய்யப்பன் கோவிலுக்கு வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக தேங்காய் விற்பனை வழக்கத்தைவிட அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    சேலம் கடைவீதி, ஆற்றோரம் தெரு , ஆனந்தா மார்க்கெட், பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவு தேங்காய் ரூ.8- ரூ.10 , நடுத்தர அளவு தேங்காய் ரூ‌.12 - ரூ.15 , பெரிய அளவு தேங்காய் ரூ. 20- ரூ.22 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ், ஜனவரி மாதம் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை சீசன் வரை விற்பனை நன்றாக இருக்கும்.

    இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    சேலம் மார்க்கெட்டுக்கு தினமும் 400 டன் வரை தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சில்லரை வியாபாரிகள் தேங்காயை விற்பனைக்கு வாங்கிச் செல்கின்றனர். மழை காரணமாக தேங்காய் வரத்தானது சற்று குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக கடந்த வாரம் தேங்காய் டன் ஒன்றுக்கு ரூ.5000 வரை விலை உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் சீசன் களை கட்டியுள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் நெய் தேங்காய் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இதற்கு பெரிய அளவில் உள்ள தேங்காயும், சாமி சிலை சன்னதியில் உடைக்க சிறிய அளவில் உள்ள தேங்காயும் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. இதனால் இந்த வாரத்தில் தேங்காய் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்து இருந்தாலும் விலை உயர்த்தப்படவில்லை.

    இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

    • பட்டாசு, துணி விற்பனை குறைவு என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
    • ரூ.20 லட்சம் வரையிலான கார்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    கோவை,

    ெகாரோனா நோய்தொற்று பரவலுக்கு பின்னர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஆடம்பர பொருட்கள் குறிப்பாக டி.விக்கள், கார்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் கார் விற்பனையாளர்கள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஆடம்பர சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரையிலான கார்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இது தவிர சிறிய ரக கார்கள் விற்பனையில் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு கார் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

    தனியார் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை கடை உரிமையாளர்கள் கூறும்போது,

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக லட்டு, ஜிலேபி, பாதுஷா, மைசூர்பா உள்ளிட்ட இனிப்பு வகைகள் மிக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. பால் இனிப்பு வகைகளுக்கு வழக்கமான வரவேற்பு காணப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இனிப்பு வகைகள் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.

    தனியார் எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையாளர்கள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஆடம்பர வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பெரிய 55, 43, 65, 75 இன்ச் எல்.இ.டி டிவிக்கள் மற்றும் ஆடம்பர டிவிக்கள் விற்பனை அதிகரித்தது. இவற்றின் விலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரையாகும். இது தவிர ஆடம்பர மாடல் பிரிட்ஜ் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ1.2 லட்சம் வரை, வாஷிங் மெஷின் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை. சிறிய பொருட்களான மிக்சி, கிரைண்டர், வாட்டர் ஹீட்டர், கேஸ் அடுப்பு, விற்பனையும் நன்றாக இருந்தது. கடந்தாண்டு போலவே விற்பனை இருந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆனால் இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளதால். விற்பனை சராசரி அளவில் தான் இருந்ததாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதேபோன்று விலை உயர்வு காரணமாக கடந்த ஆண்டு விற்பனையை விட 20 சதவீதம் குறைவாகவே ஜவுளிப்பொருட்கள் விற்பனையாகி உள்ளது.

    மொபைல் போன்கள் தள்ளுபடியை வைத்தே விற்பனை நடைபெற்றது. இதனால் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான மொபைல்போன்கள் விற்பனை அதிகளவில் இருந்தது. 

    ×