search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சென்னையில் மட்டும் 1,132 புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

    தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 295 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 40 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 5 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை
    10 ஆயிரத்து 586 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

    அரியலூர் - 15
    செங்கல்பட்டு - 231
    சென்னை - 1,132
    கோவை - 389
    கடலூர் - 113
    தர்மபுரி - 75
    திண்டுக்கல் - 35
    ஈரோடு - 122
    கள்ளக்குறிச்சி - 45
    காஞ்சிபுரம் - 148
    கன்னியாகுமரி - 65
    கரூர் - 36
    கிருஷ்ணகிரி - 69
    மதுரை - 76
    நாகை - 56
    நாமக்கல் - 131
    நீலகிரி - 88
    பெரம்பலூர் - 8
    புதுக்கோட்டை - 48
    ராமநாதபுரம் - 14
    ராணிப்பேட்டை - 66
    சேலம் - 240
    சிவகங்கை - 27
    தென்காசி - 12
    தஞ்சாவூர் - 101
    தேனி - 29
    திருப்பத்தூர் - 32
    திருவள்ளூர் - 218
    திருவண்ணாமலை - 62
    திருவாரூர் - 87
    தூத்துக்குடி - 48
    திருநெல்வேலி - 47
    திருப்பூர் - 159
    திருச்சி - 67
    வேலூர் - 91
    விழுப்புரம் - 80
    விருதுநகர் - 33
    விமான நிலைய கண்காணிப்பு
    வெளிநாடு - 0
    உள்நாடு - 0
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

    மொத்தம் - 4,295
    Next Story
    ×