என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 90 வயதுக்கு மேற்பட்ட 27 கொரோனா நோயாளிகள் பூரண குணம்
Byமாலை மலர்17 Oct 2020 6:27 AM GMT (Updated: 17 Oct 2020 6:27 AM GMT)
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 90 வயதுக்கு மேற்பட்ட 27 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் கொரோனா தொற்றுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கொரோனா தொற்று பாதிப்புடன், நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசம் செயலிழப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 99 வயது மூதாட்டி உள்பட 90 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்கள் நேற்று பூரண குணமடைந்து வீடுதிரும்பினர். அவர்களை மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
மேலும் இதுகுறித்து டாக்டர் தேரணிராஜன் கூறும்போது, ‘தற்போது மருத்துவமனையில் 756 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 376 பேர் கொரோனா அறிகுறியுடனும், 380 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளனர். இதில் 100 வயது முதியவர் உள்பட 90 வயதுக்கு மேற்பட்ட 27 முதியவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். டாக்டர்கள், செவிலியர்களின் சிறப்பான சேவையினால் நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர். அவர்களின் சேவை பாராட்டுதலுக்குறியது.’ என்றார்.
சென்னையில் கொரோனா தொற்றுக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா மையங்களிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கொரோனா தொற்று பாதிப்புடன், நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசம் செயலிழப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 99 வயது மூதாட்டி உள்பட 90 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்கள் நேற்று பூரண குணமடைந்து வீடுதிரும்பினர். அவர்களை மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
மேலும் இதுகுறித்து டாக்டர் தேரணிராஜன் கூறும்போது, ‘தற்போது மருத்துவமனையில் 756 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 376 பேர் கொரோனா அறிகுறியுடனும், 380 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்துள்ளனர். இதில் 100 வயது முதியவர் உள்பட 90 வயதுக்கு மேற்பட்ட 27 முதியவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். டாக்டர்கள், செவிலியர்களின் சிறப்பான சேவையினால் நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர். அவர்களின் சேவை பாராட்டுதலுக்குறியது.’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X