search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 206
    செங்கல்பட்டு - 2,035
    சென்னை - 10,436
    கோவை - 3,549
    கடலூர் - 2,818
    தர்மபுரி - 776
    திண்டுக்கல் - 723
    ஈரோடு - 1,055
    கள்ளக்குறிச்சி - 944
    காஞ்சிபுரம் - 1,264
    கன்னியாகுமரி - 754
    கரூர் - 418
    கிருஷ்ணகிரி - 790 
    மதுரை - 692
    நாகை - 1,166
    நாமக்கல் - 893
    நீலகிரி - 591
    பெரம்பலூர் - 111
    புதுக்கோட்டை - 785
    ராமநாதபுரம் - 247
    ராணிப்பேட்டை - 647
    சேலம் - 2,045
    சிவகங்கை - 233
    தென்காசி - 588
    தஞ்சாவூர் - 890
    தேனி - 759
    திருப்பத்தூர் - 519
    திருவள்ளூர் - 2,043
    திருவண்ணாமலை - 1,486
    திருவாரூர் - 723
    தூத்துக்குடி - 709
    திருநெல்வேலி - 1,025
    திருப்பூர் - 1,822
    திருச்சி - 854
    வேலூர் - 1,003
    விழுப்புரம் - 868
    விருதுநகர் - 386
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 6
    உள்நாடு - 51
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

    மொத்தம் - 46,912
    Next Story
    ×