என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர் - வியாசர்பாடி மாணவி குற்றச்சாட்டு
Byமாலை மலர்14 Sep 2020 2:41 AM GMT (Updated: 14 Sep 2020 2:41 AM GMT)
உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால் என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர் என வியாசர்பாடி மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா (வயது 18). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த உடன் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எனது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்ததால் என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர். எனவே நான் இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.
ஆனால் இவருடைய குற்றச்சாட்டை அந்த தேர்வு மையத்தின் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர். அவரை தேர்வு எழுதுவதற்கு முழுமையாக அனுமதித்தோம் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் தங்களிடம் எந்த புகாரும் வரவில்லை என்று கீழ்ப்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். நீட் தேர்வு தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்க விரும்பினால் டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு மட்டுமே அளிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X