search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 47 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 693 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 717 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 227
    செங்கல்பட்டு - 1,987
    சென்னை - 10,393
    கோவை - 3,495
    கடலூர் - 2,966
    தர்மபுரி - 697
    திண்டுக்கல் - 762
    ஈரோடு - 1,043
    கள்ளக்குறிச்சி - 910
    காஞ்சிபுரம் - 1,273
    கன்னியாகுமரி - 736
    கரூர் - 397
    கிருஷ்ணகிரி - 858 
    மதுரை - 892
    நாகை - 1,136
    நாமக்கல் - 912
    நீலகிரி - 549
    பெரம்பலூர் - 112
    புதுக்கோட்டை - 786
    ராமநாதபுரம் - 244
    ராணிப்பேட்டை - 690
    சேலம் - 1,982
    சிவகங்கை - 236
    தென்காசி - 553
    தஞ்சாவூர் - 877
    தேனி - 786
    திருப்பத்தூர் - 492
    திருவள்ளூர் - 2,087
    திருவண்ணாமலை - 1,539
    திருவாரூர் - 700
    தூத்துக்குடி - 681
    திருநெல்வேலி - 1,072
    திருப்பூர் - 1,717
    திருச்சி - 891
    வேலூர் - 932
    விழுப்புரம் - 880
    விருதுநகர் - 436
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 16
    உள்நாடு - 68
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

    மொத்தம் - 47,012
    Next Story
    ×