என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 8 சதவீதம் அதிகரிப்பு- சென்னை மாநகராட்சி தகவல்
Byமாலை மலர்9 Aug 2020 10:27 PM GMT (Updated: 9 Aug 2020 10:27 PM GMT)
கடந்த 7 நாட்களில் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 8 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில் கடந்த 7 நாட்களில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது எனவும், 10 மண்டலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி சோழிங்கநல்லூர் மண்டலத்தில் அதிகபட்சமாக கடந்த 7 நாட்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2.4 சதவீதமும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 1 சதவீதமும், ஆலந்தூர் மண்டலத்தில் 0.6 சதவீதமும், அம்பத்தூர் மண்டலத்தில் 0.3 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஆனால் பெருங்குடி மண்டலத்தில் 0.5 சதவீதமும், அண்ணாநகர் மற்றும் அடையாறு மண்டலங்களில் 0.6 சதவீதமும், ராயபுரம் மண்டலத்தில் 0.9 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது.
இதேபோல் வளசரவாக்கத்தில் 2.1 சதவீதமும், தண்டையார்பேட்டையில் 2.2 சதவீதமும், தேனாம்பேட்டையில் 2.5 சதவீதமும், திருவொற்றியூர் 4 சதவீதமும், மாதவரத்தில் 7.5 சதவீதமும், மணலி மண்டலத்தில் 9.2 சதவீதமும் பாதிப்பு குறைந்துள்ளது.
மேற்கண்ட தகவல்கள் சென்னை மாநகராட்சி இணையதளம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X