search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    4 ஆயிரத்து 500-ஐ கடந்த பலி எண்ணிக்கை - தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரேநாளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 500-ஐ கடந்தது.
    சென்னை:
     
    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 684 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 144 ஆக அதிகரித்துள்ளது.  

    இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 642 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 272 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது (மறுகணக்கீட்டில் சேர்க்கப்பட்ட 444 உயிரிழப்புகள் உள்பட).

    மாவட்ட வாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:

    அரியலூர் - 10
    செங்கல்பட்டு - 284
    சென்னை - 2,248
    கோவை - 96
    கடலூர் - 49
    தர்மபுரி - 7
    திண்டுக்கல் - 63
    ஈரோடு - 13
    கள்ளக்குறிச்சி - 30
    காஞ்சிபுரம் - 137
    கன்னியாகுமரி - 63
    கரூர் - 10
    கிருஷ்ணகிரி - 16 
    மதுரை - 276
    நாகை - 11
    நாமக்கல் - 10
    நீலகிரி - 3
    பெரம்பலூர் - 9
    புதுக்கோட்டை - 33
    ராமநாதபுரம் - 71
    ராணிப்பேட்டை - 44
    சேலம் - 43
    சிவகங்கை - 55
    தென்காசி - 39
    தஞ்சாவூர் - 36
    தேனி - 82
    திருப்பத்தூர் - 25
    திருவள்ளூர் - 268
    திருவண்ணாமலை - 81
    திருவாரூர் - 12
    தூத்துக்குடி - 61
    திருநெல்வேலி - 65
    திருப்பூர் - 18
    திருச்சி - 67
    வேலூர் - 81
    விழுப்புரம் - 40
    விருதுநகர் - 114
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 1
    உள்நாடு - 0
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

    மொத்தம் - 4,571
    Next Story
    ×