என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாற்றுத்திறனாளிக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்த கலெக்டர்
Byமாலை மலர்4 Aug 2020 10:00 AM GMT (Updated: 4 Aug 2020 10:00 AM GMT)
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளியின் இருப்பிடத்திற்கு, கலெக்டர் கந்தசாமி சென்று, அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் பிரதான சாலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த வழியாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்விற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது முதியவர் ஒருவர் மிகவும் சிரமப்பட்டு நடந்து வருவதை அவர் பார்த்துள்ளார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி அந்த முதியவரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அவர், தனது பெயர் பரசுராமன் என்றும், காலில் அடிபட்டு ஊனமானதால் குச்சி வைத்து நடந்து வந்தேன். தற்போது குச்சி உடைந்ததால் நடப்பதற்கு கஷ்டமாக உள்ளது. நான் இந்த பஸ் நிலையத்தில் தான் தங்கி உள்ளேன் என்றார். உடனடியாக பரசுராமனுக்கு புதிய ஊன்றுகோல் மற்றும் தனது சொந்த பணத்தில் ரூ.5000 வழங்கி விரைவில் மற்ற உதவிகள் செய்து தருவதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் கால் ஊனத்தால் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு சிரமப்பட்டு வரும் மாற்றுத்திறனாளி பரசுராமனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக புதுப்பிக்கப்பட்ட 3 சக்கர சைக்கிள், அடையாள அட்டை, வருவாய்த் துறை மூலமாக மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று வழங்கினார்.
மேலும் திருவண்ணாமலை நகராட்சி அம்மா உணவகத்தில் அவரது அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக உணவு சாப்பிடவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனை பெற்று கொண்ட பரசுராமன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் மந்தாகினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் பிரதான சாலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த வழியாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்விற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது முதியவர் ஒருவர் மிகவும் சிரமப்பட்டு நடந்து வருவதை அவர் பார்த்துள்ளார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி அந்த முதியவரிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது அவர், தனது பெயர் பரசுராமன் என்றும், காலில் அடிபட்டு ஊனமானதால் குச்சி வைத்து நடந்து வந்தேன். தற்போது குச்சி உடைந்ததால் நடப்பதற்கு கஷ்டமாக உள்ளது. நான் இந்த பஸ் நிலையத்தில் தான் தங்கி உள்ளேன் என்றார். உடனடியாக பரசுராமனுக்கு புதிய ஊன்றுகோல் மற்றும் தனது சொந்த பணத்தில் ரூ.5000 வழங்கி விரைவில் மற்ற உதவிகள் செய்து தருவதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் கால் ஊனத்தால் பாதிக்கப்பட்டு நடப்பதற்கு சிரமப்பட்டு வரும் மாற்றுத்திறனாளி பரசுராமனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக புதுப்பிக்கப்பட்ட 3 சக்கர சைக்கிள், அடையாள அட்டை, வருவாய்த் துறை மூலமாக மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று வழங்கினார்.
மேலும் திருவண்ணாமலை நகராட்சி அம்மா உணவகத்தில் அவரது அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக உணவு சாப்பிடவும் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனை பெற்று கொண்ட பரசுராமன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் மந்தாகினி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X