search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒரே நாளில் 5,800 பேர் டிஸ்சார்ஜ் - 2 லட்சத்தை கடந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 609 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.  

    இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
    சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 4 ஆயிரத்து 241 பேர் பலியாகியுள்ளனர்.

    ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 800 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

    அரியலூர் - 849
    செங்கல்பட்டு - 12,676
    சென்னை - 88,826
    கோவை - 3,685
    கடலூர் - 2,028
    தர்மபுரி - 559
    திண்டுக்கல் - 2,481
    ஈரோடு - 559
    கள்ளக்குறிச்சி - 2,903
    காஞ்சிபுரம் - 6,757
    கன்னியாகுமரி - 3,180
    கரூர் - 297
    கிருஷ்ணகிரி - 617 
    மதுரை - 8,787
    நாகை - 453
    நாமக்கல் - 443
    நீலகிரி - 700
    பெரம்பலூர் - 323
    புதுக்கோட்டை - 1,597
    ராமநாதபுரம் - 2,814
    ராணிப்பேட்டை - 3,945
    சேலம் - 2,686
    சிவகங்கை - 2,078
    தென்காசி - 1,236
    தஞ்சாவூர் - 2,147
    தேனி - 3,323
    திருப்பத்தூர் - 792
    திருவள்ளூர் - 11,083
    திருவண்ணாமலை - 4,269
    திருவாரூர் - 1,398
    தூத்துக்குடி - 5,651
    திருநெல்வேலி - 3,289
    திருப்பூர் - 617
    திருச்சி - 2,944
    வேலூர் - 5,094
    விழுப்புரம் - 3,257
    விருதுநகர் - 6,336
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 685
    உள்நாடு - 457
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 424

    மொத்தம் - 2,02,283
    Next Story
    ×