search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    நெல்லையில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    நெல்லையில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,649 ஆக அதிகரித்துள்ளது.
    நெல்லை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நெல்லையில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,649 ஆக அதிகரித்துள்ளது.

    அதிகபட்சமாக நெல்லை மாநகரில் 26 பேருக்கும், அம்பாசமுத்திரத்தில் 17 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.


    Next Story
    ×