search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    65 சிஐஎஸ்எப் வீரர்களுக்கு கொரோனா தொற்று

    ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மைய வளாகத்தில் 65 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. என்றாலும் நோய்த் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மைய வளாகத்தில் 65 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×