search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தேனியில் இன்று மேலும் 308 பேருக்கு கொரோனா உறுதி

    தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 308 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5,972 ஆக அதிகரித்துள்ளது.
    தேனி:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 308 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5,972 ஆக அதிகரித்துள்ளது.

    தேனியில் 3,180 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,724 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×