search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒரே நாளில் 5,517 பேர் டிஸ்சார்ஜ் - 2 லட்சத்தை நெருங்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 875 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது.  

    இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு
    சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 4 ஆயிரத்து 132 பேர் பலியாகியுள்ளனர்.

    ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 517 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்/டிஸ்சார்ஜ் எண்ணிக்கை:-

    அரியலூர் - 810
    செங்கல்பட்டு - 12,238
    சென்னை - 87,604
    கோவை - 3,469
    கடலூர் - 1,964
    தர்மபுரி - 535
    திண்டுக்கல் - 2,370
    ஈரோடு - 583
    கள்ளக்குறிச்சி - 2,828
    காஞ்சிபுரம் - 6,229
    கன்னியாகுமரி - 3,000
    கரூர் - 291
    கிருஷ்ணகிரி - 578 
    மதுரை - 8,745
    நாகை - 444
    நாமக்கல் - 422
    நீலகிரி - 672
    பெரம்பலூர் - 313
    புதுக்கோட்டை - 1,484
    ராமநாதபுரம் - 2,744
    ராணிப்பேட்டை - 3,751
    சேலம் - 2,605
    சிவகங்கை - 2,037
    தென்காசி - 1,191
    தஞ்சாவூர் - 2,006
    தேனி - 3,180
    திருப்பத்தூர் - 745
    திருவள்ளூர் - 10,746
    திருவண்ணாமலை - 4,202
    திருவாரூர் - 1,305
    தூத்துக்குடி - 5,424
    திருநெல்வேலி - 3,078
    திருப்பூர் - 597
    திருச்சி - 2,782
    வேலூர் - 4,848
    விழுப்புரம் - 3,007
    விருதுநகர் - 6,098
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 678
    உள்நாடு - 456
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 424

    மொத்தம் - 1,96,483
    Next Story
    ×