search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 48 ஆயிரம் பேர் - மாவட்டவாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 48 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 48 ஆயிரத்து 196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.  

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 92 ஆயிரத்து 567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 53
    செங்கல்பட்டு - 3,589
    சென்னை - 16,601
    கோவை - 960
    கடலூர் - 427
    தர்மபுரி - 160
    திண்டுக்கல் - 213
    ஈரோடு - 239
    கள்ளக்குறிச்சி - 823
    காஞ்சிபுரம் - 2,573
    கன்னியாகுமரி - 993
    கரூர் - 56
    கிருஷ்ணகிரி - 95 
    மதுரை - 3,803
    நாகை - 192
    நாமக்கல் - 92
    நீலகிரி - 128
    பெரம்பலூர் - 12
    புதுக்கோட்டை - 278
    ராமநாதபுரம் - 1,069
    ராணிப்பேட்டை - 897
    சேலம் - 988
    சிவகங்கை - 340
    தென்காசி - 394
    தஞ்சாவூர் - 279
    தேனி - 1,173
    திருப்பத்தூர் - 196
    திருவள்ளூர் - 2,647
    திருவண்ணாமலை - 1,368
    திருவாரூர் - 297
    தூத்துக்குடி - 1,274
    திருநெல்வேலி - 996
    திருப்பூர் - 128
    திருச்சி - 698
    வேலூர் - 1,824
    விழுப்புரம் - 590
    விருதுநகர் - 1,099
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 323
    உள்நாடு - 233
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 96

    மொத்தம் - 48,196

    Next Story
    ×