search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம்

    பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்காக ரூ.40 லட்சத்தில் புதியதாக கொரோனா பரிசோதனை ஆய்வக உபகரணம் வாங்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வக உபகரணத்தை கொண்டு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்ய முடியும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×