search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து திரும்பியவர்களுக்கு வரவேற்பு
    X
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து திரும்பியவர்களுக்கு வரவேற்பு

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு வரவேற்பு

    அகரம் ஊராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் ஒன்றியம் அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் 2 பேர் ஆந்திராவில் இருந்து கடந்த வாரம் வீடுகளுக்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது சிகிச்சை முடிந்து அவர்கள் 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பினார்கள். அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி தலைமையில் பொதுமக்கள் சால்வை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்றனர்.
    Next Story
    ×