search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண் கொரோனாவுக்கு பலி

    சென்னையில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அவரது குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நலமுடன் உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 12 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகினர். இதில் சென்னையை சேர்ந்த 17 வயது பெண்ணும், வேலூரை சேர்ந்த 25 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையை சேர்ந்த 33 வயது பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த மே மாதம் 23-ந்தேதி சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது. அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை பிறந்த உடன் இறந்துவிட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நலமுடன் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×