என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எட்டயபுரம் வந்த மணப்பெண்ணுக்கு கொரோனா: திருமணம் தள்ளிவைப்பு
Byமாலை மலர்28 May 2020 1:57 AM GMT (Updated: 28 May 2020 1:57 AM GMT)
சென்னையில் இருந்து எட்டயபுரம் வந்த மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.
எட்டயபுரம்:
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண்ணுக்கும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெரிய தெருவைச் சேர்ந்த 26 வயதான வாலிபருக்கும் வருகிற 7-ந்தேதி எட்டயபுரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மணப்பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேர் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தனர்.
அவர்கள், தூத்துக்குடி மாவட்ட எல்லையான எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை சோதனைச்சாவடியில் வந்தபோது, மணப்பெண் உள்ளிட்ட 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் 5 பேரையும் எட்டயபுரம் இல்லத்து பிள்ளைமார் தெருவில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டில் தனிமைப்படுத்தினர். இதற்கிடையே, மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், மணப்பெண்ணின் குடும்பத்தினரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். இதையடுத்து வருகிற 7-ந்தேதி நடைபெற இருந்த திருமணத்தை தள்ளி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து எட்டயபுரம் இல்லத்து பிள்ளைமார் தெருவில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கணேசன் தலைமையில், சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அங்கு அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது.
அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில், தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண்ணுக்கும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெரிய தெருவைச் சேர்ந்த 26 வயதான வாலிபருக்கும் வருகிற 7-ந்தேதி எட்டயபுரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மணப்பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேர் ஒரு காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்தனர்.
அவர்கள், தூத்துக்குடி மாவட்ட எல்லையான எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை சோதனைச்சாவடியில் வந்தபோது, மணப்பெண் உள்ளிட்ட 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் 5 பேரையும் எட்டயபுரம் இல்லத்து பிள்ளைமார் தெருவில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டில் தனிமைப்படுத்தினர். இதற்கிடையே, மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், மணப்பெண்ணின் குடும்பத்தினரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். இதையடுத்து வருகிற 7-ந்தேதி நடைபெற இருந்த திருமணத்தை தள்ளி வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து எட்டயபுரம் இல்லத்து பிள்ளைமார் தெருவில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கணேசன் தலைமையில், சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அங்கு அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிறது.
அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில், தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X