search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க அரசு அனுமதி

    தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை இயக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
    சென்னை:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

    இதற்கிடையில், நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களில் கூடுதலாக 2 ஆயிரத்து 600 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என இந்திய ரெயில்வே தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்களை மட்டும் இயக்கிக்கொள்ள ரெயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

    தமிழகத்தில் இயக்கப்பட உள்ள இந்த 4 சிறப்பு ரெயில்களில் ஏசி வசதி இருக்கக்கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் கடிதத்தின் அடிப்படையில் ரெயில்வே நிர்வாகத்திற்கு தெற்கு ரெயில்வே பரிந்துரை வழங்கியுள்ளது.

    4 சிறப்பு ரெயில்கள் இயங்க அரசு அனுமதித்துள்ள வழித்தடங்கள்:-

    கோவை - மயிலாடுதுறை
    விழுப்புரம் - மதுரை
    கோவை - காட்பாடி
    திருச்சி - நாகர்கோவில் 
    Next Story
    ×