search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்- சுகாதாரத்துறை அறிவிப்பு

    கொரோனா பரிசோதனைக்காக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண்ணை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 57 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 50 பேர் டெல்லியில் கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். இதனால் இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளவில்லை என்றால் 7824849263 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது 044-46274411 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×