என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக கவசம் தயாரித்து வழங்கும் ஆயுதப்படை பெண் போலீசார்
Byமாலை மலர்2 April 2020 3:11 AM GMT (Updated: 2 April 2020 3:11 AM GMT)
சென்னை போலீசாருக்கு இலவசமாக முக கவசம் தயாரித்து வழங்கும் பணியில் சென்னை ஆயுதப்படை பெண் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை :
கொரோனா வைரஸ் என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொருவரும் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக தற்போது 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஆனால் போலீசார் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது. பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.
இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் முகக்கவசத்தை அணிந்து கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். முகக்கவசத்தை அணிந்து கொண்டுதான் அவர்கள் காவல் பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னை எழும்பூர் ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் போலீசார் சிலர் வித்தியாசமான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தையல் தொழில் தெரிந்த 30 பெண் போலீசார், தங்களது வீட்டில் உள்ள தையல் எந்திரங்களை ஒட்டுமொத்தமாக எடுத்து வந்து ஒரே இடத்தில் வைத்து, முக கவசம் தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக 60 ஆயிரம் முகக்கவசங்களை தயாரித்து, சென்னை மாநகர போலீசாருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்திரராஜன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ரூ.3 லட்சம் நிதியை கொடுத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். முக கவசம் மட்டும் அல்லாமல், கைகளை கழுவ உதவும் கிருமிநாசினி தயாரிக்கும் பணியும், எழும்பூரில் எனது அலுவலகத்திற்கு மேல் உள்ள மாநாட்டு கூடத்தில் கடந்த 2 நாட்களாக நடக்கிறது.
இதற்காக 30 பெண் போலீசாரும், 10 ஆண் போலீசாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிருமிநாசினி தயாரிக்கும் பணிக்கு ஆண் போலீசாரும், முககவசம் தாயாரிக்கும் பணிக்கு பெண் போலீசாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிருமிநாசினி தயாரிப்பு பணிக்கு கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த போலீஸ் துறை இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ராஜீவ்காந்தி அரசு மருத்துமனை டாக்டர்கள் நேரில் வந்து பயிற்சி கொடுத்தனர். முக கவசம் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை காங்கேயத்தில் இருந்து போலீஸ் வாகனத்தில் சென்று வாங்கி வந்துள்ளோம்.
ஒரு முக கவசம் தயாரிக்க அடக்க செலவு ரூ.1.50-தான் ஆகிறது. மூலப்பொருட்கள் மட்டும்தான் எங்களுக்கு செலவு. மற்றவற்றை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.
தினமும் 2 ஆயிரம் முக கவசம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். தினமும் 500 லிட்டர் கிருமிநாசினி தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இவற்றை சென்னை போலீசுக்கு இலவசமாக வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே சிறைத்துறையில் கைதிகள் வாயிலாக தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் முக கவசம் தயாரிக்கும் பணி நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொருவரும் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதற்காக தற்போது 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஆனால் போலீசார் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது. பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.
இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் முகக்கவசத்தை அணிந்து கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். முகக்கவசத்தை அணிந்து கொண்டுதான் அவர்கள் காவல் பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னை எழும்பூர் ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் போலீசார் சிலர் வித்தியாசமான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தையல் தொழில் தெரிந்த 30 பெண் போலீசார், தங்களது வீட்டில் உள்ள தையல் எந்திரங்களை ஒட்டுமொத்தமாக எடுத்து வந்து ஒரே இடத்தில் வைத்து, முக கவசம் தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக 60 ஆயிரம் முகக்கவசங்களை தயாரித்து, சென்னை மாநகர போலீசாருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்திரராஜன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ரூ.3 லட்சம் நிதியை கொடுத்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். முக கவசம் மட்டும் அல்லாமல், கைகளை கழுவ உதவும் கிருமிநாசினி தயாரிக்கும் பணியும், எழும்பூரில் எனது அலுவலகத்திற்கு மேல் உள்ள மாநாட்டு கூடத்தில் கடந்த 2 நாட்களாக நடக்கிறது.
இதற்காக 30 பெண் போலீசாரும், 10 ஆண் போலீசாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கிருமிநாசினி தயாரிக்கும் பணிக்கு ஆண் போலீசாரும், முககவசம் தாயாரிக்கும் பணிக்கு பெண் போலீசாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிருமிநாசினி தயாரிப்பு பணிக்கு கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த போலீஸ் துறை இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ராஜீவ்காந்தி அரசு மருத்துமனை டாக்டர்கள் நேரில் வந்து பயிற்சி கொடுத்தனர். முக கவசம் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை காங்கேயத்தில் இருந்து போலீஸ் வாகனத்தில் சென்று வாங்கி வந்துள்ளோம்.
ஒரு முக கவசம் தயாரிக்க அடக்க செலவு ரூ.1.50-தான் ஆகிறது. மூலப்பொருட்கள் மட்டும்தான் எங்களுக்கு செலவு. மற்றவற்றை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.
தினமும் 2 ஆயிரம் முக கவசம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். தினமும் 500 லிட்டர் கிருமிநாசினி தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இவற்றை சென்னை போலீசுக்கு இலவசமாக வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே சிறைத்துறையில் கைதிகள் வாயிலாக தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் முக கவசம் தயாரிக்கும் பணி நடந்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X