என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் உடையில் டிக் டாக் வீடியோ - துணை நடிகைக்கு போலீஸ் எச்சரிக்கை
Byமாலை மலர்28 Feb 2020 5:56 AM GMT (Updated: 28 Feb 2020 5:56 AM GMT)
லைக்கிற்கு ஆசைப்பட்டு போலீஸ் உடையில் டிக்டாக் வீடியோ பதிவிட்ட துணை நடிகை ஸ்ரீனிகாவுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
டிக்டாக் செயலி மூலம் வீடியோக்கள் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடும் பொழுதுபோக்கு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இதனால் சிக்கல்களிலும் சிலர் சிக்கி கொள்கிறார்கள்.
ராதிகா என்ற ஐடியில் இருந்து தினமும் போலீஸ் உடையில் பெண் ஒருவர் டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சில வீடியோக்களில் அவருடன் இருந்தவர்களும் போலீஸ் உடையில் இருந்தனர். இதனால் பெண் போலீசார் டிக் டாக்கில் கூத்தடிக்கிறார்கள் என்று விமர்சித்து வந்தனர்.
இந்த வீடியோக்கள் போலீசாரின் கவனத்திற்குச் செல்ல, டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐடியில் உள்ள வீடியோக்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் நர்சாக இருந்து துணை நடிகையான ஸ்ரீனிகா என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். லைக்கிற்கு ஆசைப்பட்டு அந்த பெண் இவ்வாறு செய்து வந்துள்ளார். அவரை கண்டுபிடித்து காவல் துறையை இழிவுபடுத்தும் வகையில் இனி வீடியோ வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
உண்மையான காவலர்கள் என நினைத்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வீடியோக்கள் பெண் காவலர்களுக்கு அவப்பெயரை வாங்கித்தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டிக்டாக் செயலி மூலம் வீடியோக்கள் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடும் பொழுதுபோக்கு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இதனால் சிக்கல்களிலும் சிலர் சிக்கி கொள்கிறார்கள்.
ராதிகா என்ற ஐடியில் இருந்து தினமும் போலீஸ் உடையில் பெண் ஒருவர் டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சில வீடியோக்களில் அவருடன் இருந்தவர்களும் போலீஸ் உடையில் இருந்தனர். இதனால் பெண் போலீசார் டிக் டாக்கில் கூத்தடிக்கிறார்கள் என்று விமர்சித்து வந்தனர்.
இந்த வீடியோக்கள் போலீசாரின் கவனத்திற்குச் செல்ல, டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐடியில் உள்ள வீடியோக்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் நர்சாக இருந்து துணை நடிகையான ஸ்ரீனிகா என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். லைக்கிற்கு ஆசைப்பட்டு அந்த பெண் இவ்வாறு செய்து வந்துள்ளார். அவரை கண்டுபிடித்து காவல் துறையை இழிவுபடுத்தும் வகையில் இனி வீடியோ வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
உண்மையான காவலர்கள் என நினைத்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வீடியோக்கள் பெண் காவலர்களுக்கு அவப்பெயரை வாங்கித்தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X