என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் ரஜினியை பார்த்து யார் என்று கேட்ட வாலிபர் திருட்டு வழக்கில் கைது
Byமாலை மலர்22 Feb 2020 4:49 AM GMT (Updated: 22 Feb 2020 4:49 AM GMT)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்த ரஜினியை பார்த்து யார் என்று கேட்ட வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைதாகியுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி சென்றார்.
அப்போது, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ்ராஜ் என்பவர் “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்குமார் என்ற இளைஞரின் வீட்டின் முன்பு இருந்த பைக் திருட்டு போனது. இதையொட்டி வடபாகம் போலீசார், சந்தோஷ்ராஜை கைது செய்துள்ளனர். அவருடன் மணி, சரவணன் ஆகியோரும் பைக்கை திருடியது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X