என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் பலி
Byமாலை மலர்19 Feb 2020 8:28 AM GMT (Updated: 19 Feb 2020 8:28 AM GMT)
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் பலியானார்கள். படுகாயத்துடன் மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். பட்டாசு ஆலையில் 3 அறைகள் உள்ளன. இதில் ஒரு அறையில் ரசாயன கலவை வைக்கப்பட்டு இருக்கும். மற்ற 2 அறையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்களில் சிலர் சரவெடியில் மருந்து வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மருந்து கலவை உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையில் இருந்த ரசாயன கலவை அறை தரைமட்டமானது. இந்த விபத்து காரணமாக அங்கு கரும்புகை சூழ்ந்தது. மேலும் தொழிலாளர்களின் கூக்குரலும் கேட்டது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர். தீ அணைக்கப்பட்டதும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை தீயணைக்கும் படையினர் மீட்டனர்.
இந்த விபத்தில் வள்ளியம்மாள் (வயது 65), விஜயகுமார் (42) உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தரைமட்டமான அறையில் இருந்து லட்சுமணன் (24), லதா (35), முருகன் (30), முத்துலட்சுமி (38), அன்னலட்சுமி (58) ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30 தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். பட்டாசு ஆலையில் 3 அறைகள் உள்ளன. இதில் ஒரு அறையில் ரசாயன கலவை வைக்கப்பட்டு இருக்கும். மற்ற 2 அறையில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். அவர்களில் சிலர் சரவெடியில் மருந்து வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மருந்து கலவை உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையில் இருந்த ரசாயன கலவை அறை தரைமட்டமானது. இந்த விபத்து காரணமாக அங்கு கரும்புகை சூழ்ந்தது. மேலும் தொழிலாளர்களின் கூக்குரலும் கேட்டது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் இறங்கினர். தீ அணைக்கப்பட்டதும், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை தீயணைக்கும் படையினர் மீட்டனர்.
இந்த விபத்தில் வள்ளியம்மாள் (வயது 65), விஜயகுமார் (42) உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
தரைமட்டமான அறையில் இருந்து லட்சுமணன் (24), லதா (35), முருகன் (30), முத்துலட்சுமி (38), அன்னலட்சுமி (58) ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X