search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு ஆலை விபத்து"

    • தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன.
    • பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது.

    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 15-ந் தேதி தொடங்கி தீயணைப்புத் துறையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் திருச்சி மத்திய மண்டலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதுமுள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வடக்கு மண்டல அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. திருச்சி மத்திய மண்டலம் 2 ஆம் இடத்தையும், தெற்கு மண்டலம் 3 ஆவது இடத்தையும் பெற்றன.

    பரிசளிப்பு விழாவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகம் முழுவதும் தீயணைப்பு நிலையங்களில் மீட்புப் பணிகளுக்காக பைபர் படகுகள், ரோபோக்கள், மற்றும் நவீன சாதனங்களை தேவைக்கேற்ப கொள்முதல் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன் உரிய மாற்றங்களும் செய்யப்படும். சென்னை, மற்றும் தென் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகளின்போது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் பணி மகத்தானது எனத் தமிழக முதல்வரே பாராட்டியிருப்பது பெருமை.

    அதே நேரம் தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன. இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களின்போது தலைமைச் செயலர் ஏராளமான அறிவுரைகளைக் கூறியுள்ளார்.

    அந்த வகையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து, பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். மேலும் விபத்துகளைத் தடுக்க 6 மாதங்களுக்குள் புதிய விதிமுறைகள் வரையறுக்கப்படும்.

    பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது. தீயணைப்புத் துறை சார்பில் சிறிய குடோன்கள் மற்றும் ஆலைகளுக்குத்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் விபத்துகள் என வரும்போது தீயணைப்பு மீட்புத் துறைக்கே நெருக்கடி ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஜி. கார்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையர் ந. காமினி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மத்திய மண்டலத் துணை இயக்குநர் பி. குமார், மாவட்ட அலுவலர் வி. ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.
    • தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    இதேப்போல் காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத்தொகையை பிரதமர் நரேந்திர மோடியும் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்சமும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த தொகையை பட்டாசு குடோன் உரிமையாளரிடம் இருந்து மாநில அரசு வசூலிக்கலாம், அதில் தீர்ப்பாயம் எந்த நிபந்தனையும் இல்லாமல் அனுமதி வழங்குகிறது என்றும் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு இருந்தது.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தொடர்ந்தது.

    இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.

    அப்போது நீதிபதிகள் இத்தகைய பட்டாசு ஆலைகள் ஒழுங்காக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது அரசின் வேலையாகும்.

    மேலும், சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.

    தமிழக அரசு தரப்பில் கூறும்போது, இழப்பீடு வழங்குவதில் எந்த தயக்கமும், பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை எவ்வளவு வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நிர்ணயம் செய்யவும் முடியாது.

    அவ்வாறு இழப்பீட்டை நிர்ணயம் செய்ய தொடங்கினால், இதுதொடர் பழக்கமாக மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்ததில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும், சொத்து குவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்து பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார்.
    • படுகாயம் அடைந்த பாலாஜி, முத்துபாண்டி, ஸ்ரீமந்த் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது வெங்கடாபுரம் கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.

    இதை கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாபு புருஷோத்தமன், சஞ்சு ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த மாதம் 29-ந் தேதி கிருஷ்ணகிரி பழைய பேட்டை பட்டாசு குடோனில் நடந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு குடோன்கள் மற்றும் கடைகளை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டன.

    இந்நிலையில் ஓசூர் நில வரி திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி (வயது52) தலைமையில் தனி தாசில்தார் முத்துபாண்டி (47), தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று மதியம் வெங்கடாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையை ஆய்வு செய்வதற்காக சென்றனர்.

    அப்போது ஆலையில் இருந்த பட்டாசுகள், வெடி மருந்து பெட்டிகள் கீழே தவறி விழுந்தன. இதில் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின.

    இந்த விபத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, தாசில்தார் முத்துபாண்டி, பட்டாசு குடோன் மேலாளரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மூக்கம்பட்டி ஸ்ரீமந்த் (30) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் 3 பேரும் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் கெலமங்கலம் போலீசாருக்கும், ஓசூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு துறையினர் வாகனத்தில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து வந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விபத்து பற்றி அறிந்த மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். அவர் படுகாயம் அடைந்த பாலாஜி, முத்துபாண்டி, ஸ்ரீமந்த் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர்களுக்கு உரிய சிகிச்சையை அளிக்க டாக்ட ர்களுக்கு உத்தர விட்டார்.

    இந்த கோர விபத்தில் ஸ்ரீமந்திற்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. 90 சதவீதம் வரையில் அவருக்கு உடலில் காயங்கள் இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

    அதேபோல மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மேல் சிகிச்சைக்காக பெங்களூரு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிகாரி முத்துபாண்டி ஓசூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகலவறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விபத்து குறித்த தகவல்களை போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    பட்டாசு ஆலையின் உரிமையாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர். அந்த சம்பவம் பட்டாசு வெடித்தா? அல்லது சிலிண்டர் வெடித்ததா? என்று பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் பல்வேறு சந்ேதக ங்களை எழுப்பி வரும் நிலையில் கெலமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அதிகாரிகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மண்குண்டாம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதையொட்டி, சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் இன்று காலை தொழிலாளர்கள் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மத்தாப்பு மருந்தில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த மருந்து பொருட்கள் வெடித்து சிதறின.

    இதில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாமாக இறந்தனர். அவர்கள் பெயர், விபரம் உடனடியாக தெரியவில்லை. தகவல் அறிந்ததும் சிவகாசியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
    • 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மஜ்ரா கொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சர்கார் கொல்லப்பட்டி பூதநாச்சி அம்மன் கோவில் அருகில் விவசாய தோட்டத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.

    கந்தசாமி மகன் சதீஷ்குமார் (வயது 41), மஜ்ரா கொல்லப்பட்டியில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்தார். இதை கந்தசாமி கவனித்து வந்ததால் பட்டாசு ஆலையை தற்போது கந்தசாமியின் மகன்களான வெங்கடேசன், சதீஷ்குமார் ஆகியோர் நடத்தி வந்தனர்.

    பட்டாசு ஆலையில் நாட்டு வெடிகள் மற்றும் வாண வேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆலை தினமும் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஆர்டர் அதிகமாக இருந்ததால் பட்டாசுகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் பட்டாசு ஆலையில் நேற்று சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதில் 3 பேர் மதியத்துக்கு பிறகு சாப்பிட சென்றுவிட்டனர். இதனால் ஆலையில் 9 பேர் மட்டுமே வேலை பார்த்தனர்.

    அப்போது ஆலையில் பட்டாசுக்கு மருந்து கலவையை சதீஷ்குமார் தயார் செய்தபோது பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் பட்டாசு ஆலை தரை மட்டமானதுடன் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் அங்கு கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    பட்டாசு ஆலை வெடித்ததில் 9 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி படி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் இரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் சதீஷ்குமார் 41, நடேசன் 40, எம்.கொல்லப்பட்டி அருகே உள்ள சடையாண்டி ஊரைச் சேர்ந்த பானுமதி (55) ஆகியோர் உடல் சிதறி இறந்தனர்.

    3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டியைச் சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), எஸ்.கொல்லப் பட்டியை சேர்ந்த மணிமேகலை (36), பிரபாகரன்(30), பிருந்தா (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அனைவரும் 40 முதல் 60 சதவீதம் உடல் கருகிய நிலையில் உள்ளதால், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    தடயவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரும், காயம் அடைந்த 6 பேரின் உறவினர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த விபத்தில் இறந்த சதீஷ்குமாரின் கை 500 அடி தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிடந்தது. அதேபோல பானுமதி என்ற பெண்ணின் தலையும் துண்டானது. இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    இதற்கு இடையே சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரிடமும் வாக்குமூலம் பெற்றார்.

    அப்போது, விபத்தில் படுகாயம் அடைந்த பிருந்தா (28) கூறுகையில், எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்தோம். நான் பட்டாசுகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. என்ன ஆனது? எப்படி ஆனது என்று தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. என் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு கண் கலங்கினார்.

    பட்டாசு தயாரிப்பதற்கு 10 சதவீதம் கார்பனும், 75 சதவீதம் பொட்டாசியம் நைட்ரைட்டும், 15 சதவீதம் சல்பரும் பயன்படுத்தப்படுகிறது. இதனை சரியான அளவில் கலக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு பொருள் அதிக அளவில் கலந்தால், இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கலவை செய்யும்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனை சதீஷ்குமார் கலந்த போது தான் வெடி விபத்து நடந்துள்ளதால் அவர் கைதுண்டானதும், அவர் அருகில் நின்ற பெண்ணுக்கும் தலை துண்டாகிய கொடூர சம்பவம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.
    • இந்தப் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா நகரில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு பலர் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் பட்டாசு ஆலை நேற்று வழக்கம்போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீடு தரைமட்டமானது. விபத்து குறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

    இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    • பட்டாசு ஆலையில் 60 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்தது வந்தது.
    • விபத்தில் சம்பவ நடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமானது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணைைய சேர்ந்தவர் கேசவன் (வயது 50). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கங்கரக்கோட்டை ஊராட்சி மார்க்கநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்றது.

    இங்கு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப் படுகின்றன. இந்த பட்டாசு ஆலையில் 60 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணிகள் நடந்தது வந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

    அந்த அறையில் வேலை பார்த்து கொண்டிருந்த மார்க்கநாதபுரத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மனைவி ஜெயசித்ரா (24) விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த விபத்தில் சம்பவ நடந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சேதமானது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கங்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    இதில் பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த 31.3.2023 அன்று முடிவடைந்து விட்டதாகவும், இந்த விபத்துக்கு உரிமையாளர் கேசவன், போர்மேன் முனியசாமி ஆகியோர் உரிய பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதுதான் காரணம் என்று தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் மீது ஏழாயிரம் பண்ணை போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஆலை உரிமையாளர் கேசவன், போர்மேன் முனியசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
    • நிவாரண நிதியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான

    பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா க/பெ. அருணாச்சலம் (24) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    • குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.
    • மாலை இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சி, முனியம்பட்டியை அடுத்த சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்த அமுதா (45) மற்றும் வெள்ளா ளபுரம் வானக்கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி மாலை இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடத்தின் மேற்கூரை வெடித்து சிதறிய நிலையில் அங்கு பணியில் இருந்த அமுதா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய வேடப்பன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த வெடிவிபத்து தொடர்பாக வெடிபொருள் சட்டம் 1884, பிரிவு-9(1)ன் கீழ் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் நீதி விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும், இந்த வெடி விபத்து எந்த சூழ்நிலையில், எதனால் ஏற்பட்டது என்பது குறித்து வருகிற 25-ந்தேதி மாலை 4.30 மணிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் பொது மக்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த வெடி விபத்து குறித்து விபரங்கள் தெரிந்தவர்களும், நேரில் பார்த்தவர்களும் மற்றும் சாட்சியம் அளிக்க விரும்புப வர்களும் அன்று மாலை 4.30 மணிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் விபரங்களை பகிரங்கமா கவோ அல்லது ரகசிய மாகவோ தெரிவிக்கலா என்று கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளார்.

    • வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
    • விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி தகவல்

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கடியாட்டா என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது குண்டுவெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் வெகு தூரம் வரை கேட்டதால், அருகில் உள்ள கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

    இந்த வெடிவிபத்து பற்றி தகவல் அறித்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    பட்டாசு விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாகவும், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

    ×